Sunday, March 29, 2020

ஊடகவியலாளர்களை விட வேகமாய் செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களே. வேகத்தை விட விவேகம் முக்கியமானதாகும்.

ஊடகவியலாளர்களை விட வேகமாய் செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களே. வேகத்தை விட விவேகம் முக்கியமானதாகும்.

 தகவல்களை வழங்கும் போது அது உறுதியானதா என்று உறுதிப்படுத்திய பின்னர் வழங்குவதே ஊடக தர்மம். ஆனால் ஒரு தகவல் வந்தவுடன் உண்மை நிலையை ஆராயாமல் இன்று பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிடுகின்றனர். இதனால் கொரோனாவினை விட வேகமாக வதந்திகள் பரவுகின்றன.

அதேபோல் இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் செய்திகளும் வேகமாய் பரவுகின்றதை அண்மைய காலமாக அவதானிக்கின்றோம். ஊடகம் என்பது ஒரு கலை . அதனை கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் செல்லும். ஆனால் சமூக ஊடகத்திற்கு அவ்வாறு இல்லை. நினைத்தவுடன் ஆரம்பிக்கலாம்.

நினைத்ததை பதிவேற்றலாம். ஆனால் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே நிதானமாய் செயற்பட்டு இப்போதுள்ள நிலைமை இனவாதமாக மாறாமல் சுமூகமான நிலையை எதிர்பார்த்து சமூக பொறுப்புடன் செயற்படுவோம்.

நன்றி
அஹமத் மனாஸ்

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...