Tuesday, March 17, 2020

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு அவசர செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று 2020.03.17 காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு அவசர செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று 2020.03.17 காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சார், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின், பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்  ஆரிப், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச். சுஜீத் பெரேரா, கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக், மாநகர வைத்திய அதிகாரி டாக்டர் எம். காரியப்பர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம். ஜொவ்பர்  உட்பட வர்த்தக சங்க பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பொலீஸ் அதிகாரிகள், கலந்து கொண்ட இக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வெளிநாட்டுகளில் இருந்து 2 வாரநங்களுக்குள் நாட்டுக்குள் வந்தவர்களை அவதானித்தல்,
சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளல்,  பொது இடங்களுக்கு தேவை நிமிர்த்தம் வரும் மக்களுக்கு கை கழுவுதற்கான ஏற்பாடு செய்தல், விடுதிகளில் இருப்பவர்களை அவதானித்தால் போன்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டன.






No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...