Tuesday, March 31, 2020

கல்முனை வர்த்தக சங்கத்தினால் தெளிகருவிகள் அன்பளிப்பு

கல்முனை வர்த்தக சங்கத்தினால்  தெளிகருவிகள் அன்பளிப்பு

=========================

கல்முனை வர்த்தக சங்கத்தினால் இராணுவத்திற்கு தேவையான
மூன்று தெளிகருவிகளை (sprayers) இன்று (31) செவ்வாய்க்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரியிடமே இந்த  தெளிகருவிகள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக், செயலாளர் எஸ். ஹமீட்,  சிரேஷ்ட உறுப்பினர் எஸ்.எம். ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்திய இராணுவ கட்டுப்பாட்டு பிரிவுக்குள் உள்வருபவர்களையும் வாகனங்களையும் தெளிமருந்து தெளித்து தொற்று நீக்கி உள்வர அனுமதிக்க இராணுவம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த செயற்திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த அன்பளிப்பு கல்முனை வர்த்தக சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...